தில்லியில் காவல்துறை மெத்தனமே தில்லி வன்முறைக்கு காரணம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மோடி அரசு மக்களை மத ரீதியாக பிரிக்கும் நோக்கில் கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தில்லியில் ஷாகின் பார்க் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராட்டங்களை ஒடுக்கும் நோக்கில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பினரும் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தில்லியில் சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால் வன்முறை நிகழ்ந்து இருக்காது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. போலீஸ் சுதந்திரமாக செயல்படும் வன்முறை வலுவடைய காரணம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் காவல்துறையின் செயல்பாட்டை பாருங்கள் உயர் அதிகாரிகளின் உத்தரவுக்காக அமெரிக்க இங்கிலாந்து காவல்துறையினர் காத்திருப்பதில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து ஷாகின் பார்க்கு வழக்கை வரும் மார்ச் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது