tamilnadu

img

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்...

புதுதில்லி:
ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு விஷயத்திற்கும் உத்தரவு  பிறப்பிக்க முடியாது என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் காட்டமாக பதிலளித்துள்ளது. கொரோனா பாதித்தவர்கள் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டுவதற்கு தடை கோரிய வழக்கு விசாரணை நடைபெற்றது. மனு குறித்து பதிலளிக்க அவகாசம் கோரிய மத்திய அரசு தரப்புக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு விஷயத்திற்கும் உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. கோரிக்கையை ஏற்று 2 வார காலம் அவகாசத்தை  உச்சநீதிமன்றம் வழங்கியது.