tamilnadu

img

49 பேர் மீதான வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

சென்னை, அக். 9- எனது நண்பர்கள் 49  பேர் மீதான தேச துரோக வழக்கை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் வலி யுறுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய 49 பிரபலங்கள் மீது தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து பல்வேறு துறை களை சேர்ந்த பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர். இந்நிலையில், நடி கரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தனது டுவிட்டர்  பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:-

பிரதமர் ஒரு இணக்க மான இந்தியாவை நாடு கிறார். நாடாளுமன்றத்தில் அவர் வெளியிட்ட அறிக்கை கள் அதை உறுதிப்படுத்து கின்றன. அரசு மற்றும் அதன் சட்டம் அதை கடிதத்திலும், உணர்வுகளிலும் பின்பற்ற வேண்டாமா? எனது நண்  பர்களில் 49 பேர் பிரதம ரின் விருப்பத்திற்கு முர ணாக தேசத் துரோக குற்றச்  சாட்டுக்கு உள்ளாகியுள்ள னர். உச்சநீதிமன்றம் ஜனநாயக முறைப்படி நீதியை நிலைநாட்டவும், பீகாரில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யவும் ஒரு குடிமகனாக நான் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

;