tamilnadu

img

தொலைபேசியில் விசாரணை: 23 பேருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன்

சென்னை, மார்ச் 29- கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலில் உள்ளதால், தொலைபேசி  வழியாக வழக்குகளை விசாரித்து 23 பேருக்கு  இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா உத்தரவிட்டுள்ளார். குற்ற வழக்குகளில் சிக்கி சிறையில் இருப்  பவர்கள் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுக்  களை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி  ஏ.டி. ஜெகதீஷ்சந்திரா விசாரித்து வருகிறார்.  தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்த லால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு  அமலில் உள்ளது. இதனால் சென்னை உயர்  நீதிமன்றம் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை இழுத்து மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜாமீன் கேட்டும், ஏற்க னவே பெற்ற ஜாமீனில் விதிக்கப்பட்ட நிபந்த னையை தளர்த்தக்கோரியும் தாக்கல் செய்  யப்பட்ட 58 அவசர வழக்குகள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பு (வியாழக்கிழமை) விசாரணைக்காக பட்டியலிடப்பட்டு இருந்தது. உயர்நீதிமன்றம் இழுத்து மூடப்பட்டு இருப்பதால், இந்த வழக்குகளை நீதிபதி ஏ.டி.  ஜெகதீஷ்சந்திரா, தனது வீட்டில் இருந்த படியே விசாரித்தார். அப்போது அரசு தரப்பில்  குற்றவியல் வழக்கறிஞர் கருத்தை கேட்க வேண்டி இருந்தது. ஆனால், ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர் வீட்டைவிட்டு வெளியில் வரவில்லை. இதையடுத்து தொலைபேசியில், குற்றவியல் வழக்கறிஞர் டி.பிரபாகரிடம், நீதிபதி வழக்கு குறித்து கருத்து கேட்டார். அவர் தெரிவித்த பதிலின் அடிப்படையில், 58  வழக்குகளை விசாரித்தார். இதில், கொலை,  கொலை முயற்சி, தற்கொலைக்கு தூண்டுதல்  ஆகிய குற்றச்சாட்டுகளில் சிக்கிய 23 பேருக்கு  இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தர விட்டார்.

அதாவது இவர்களுக்கு வருகிற ஏப்ரல் 27 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்குவதாகவும், அதனால் சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகள் இவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் இதற்காக இடைக்கால ஜாமீன் பெற்ற 23 பேரும் தலா ரூ.10 ஆயி ரத்துக்கான சொந்த ஜாமீன் உத்தரவாதம் வழங்கவேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார். மேலும், ஏற்கனவே பெற்ற ஜாமீனில் விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று வெவ்வேறு வழக்கு களில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் மனு தாக்  கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த  நீதிபதி, 3 பேரின் ஜாமீன் நிபந்தனைகளையும் தளர்த்தி உத்தரவிட்டார்.