புதுதில்லி, பிப்.6- தில்லியின் ஷாகீன் பாக் பகுதியில் துப்பாக்கி யால் சுட்ட கபில் குஜ்ஜார் என்பவர் ஆம் ஆத்மி கட்சி யைச் சேர்ந்தவர் என்று மத்திய பாஜக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தில்லி காவல்துறை கூறி வரு கிறது. ஆனால், ஆம் ஆத்மி கட்சி இதனை மறுத் துள்ளது. இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய வர் ஆம் ஆத்மி கட்சிதான் என்பது உறுதியானால் அவருக்கு இருமடங்கு தண்டனை கொடுங்கள் என, அக்கட்சியின் தலை வரும் தில்லி முதல்வரு மான அரவிந்த் கெஜ்ரி வால் கூறியுள்ளார்.