நீதிபதி ராமசுப்ரமணியம் உள்ளிட்ட 4 உயர்நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு செய்ய கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
நாடாளுமன்றத்தில் சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 31 லிருந்து 34 நீதிபதிகளாக உயர்த்திக் கொள்ள திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த அடிப்படையில் 4 நீதிபதிகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இமாச்சலப்பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராமசுப்பிரமணியன், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ணா முராரி, ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ரவிந்திர பாட், கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆகியோர் பதவி உயர்வு பட்டியலில் உள்ளனர். இவர்களை உச்சநீதிமன்றத் தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
இந்த 4 நீதிபதிகளும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றால் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயரும்.