tamilnadu

img

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு

சென்னை,டிச.17- பாகிஸ்தான், ஆப்கானிஸ் தான், வங்கதேசம் ஆகிய  நாடுகளில் இருந்து இந்தியா வுக்குள் அகதிகளாக வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு சமீபத்தில் நிறை வேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரி வித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்று வருகிறது. குடியுரிமை சட்டத் திருத்தத் திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பா.ஜனதா தனது பலம் மற்றும் ஆதரவு கட்சி களுடன் இந்த சட்டத்தை கொண்டு  வந்தது. இதற்கிடையே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ஜெயராம் ரமேஷ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா, திரிபுரா  முன்னாள் மகாராஜா பிரத்யோத் கிஷோர் தேவ் வர்மன், உச்ச நீதி மன்ற வழக்கறிஞர் எம்.எல்.சர்மா  ஆகியோர் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டது.

இதே போல இந்தியன் யூனி யன் முஸ்லிம் லீக் கட்சி, அனைத்து  அசாம் மாணவர் சங்கம், ரிகாய் பஞ்ச், கமல்ஹாசனின் மக்கள் நீதி  மய்யம் உள்பட பல்வேறு அமைப்புகளின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மொத்தம் 18 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களில், “குடியுரிமை திருத்தத் சட்டம் அரசியல் சாசனம் வழங்கியுள்ள சம உரிமைக்கும், மதச்சார்பின்மைக்கு எதிரானது என்றும் எனவே இந்த சட்டத்  திருத்தத்தை ரத்து செய்ய வேண் டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி பாப்டே தலைமையில் நீதிபதிகள் கவாய், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய  பெஞ்ச் முன்பு இந்த வழக்கை அவ சரமாக விசாரிக்க வேண்டும் என்று  மூத்த வழக்கறிஞர்கள் அபி ஷேக் சிங்வி, கபில்சிபல் ஆகி யோர் முறையிட்டனர். இதைத் தொடர்ந்து 18 மனுக்களும் டிச.18  அன்று விசாரணைக்கு எடுத்துக்  கொள்ளப்படும் என்று நீதிபதி கள் தெரிவித்தனர். இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுக  தரப்பில் வழக்கு தொடரப் பட்டுள்ளது. அந்த 18 மனுக்க ளுடன் திமுகவின் மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

;