வைரவியாபாரி நிரவ் மோடி தேடப்படும் பொருளாதார குற்றவாளி என மும்பை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நிரவ் மோடியை தேடப்படும் பொருளாதார குற்றவாளியாக மும்பை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, அங்குள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றின் மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாகசுமார் ரூ.13 ஆயிரத்து 500 கோடி பரிமாற்றம் செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது இந்தியாவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனால் நீரவ் மோடி மீது உரிய நடவடிக்கை எடுக்கும் முன்பே அவர் லண்டனுக்கு தப்பிச்சென்று விட்டார்.
லண்டனில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே ஐந்தாவது முறையாக ஜாமீன் கோரி லண்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவை நேற்று விசாரித்த லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் இன்று நிரவ் மோடியின் வங்கி பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடனை செலுத்தாமல் வெளிநாடு தப்பியோடிய நிரவ் மோடியை தேடப்படும் பொருளாதார குற்றவாளியாக அறிவித்து உத்தரவிட்டது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள நிரவ் மோடியின் சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.