புதுதில்லி,நவ.3- தில்லி நீதிமன்ற வளாகத்தில் போலீசாருக்கும் வழக்கறிஞர் களுக்கும் இடையே சனிக்கிழ மையன்று நிகழ்ந்த மோதல் குறித்து விசாரண நடத்த சிறப்பு விசா ரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தில்லி தீஸ்ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக வழக்கறிஞர் ஒரு வருக்கும் போலீசார் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் நடைபெற்றது. இதில் போலீ சார், வழக்கறிஞர்கள் காயமடைந்த னர். இந்த சம்பவம் குறித்து தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். படேல், மூத்த போலீஸ் அதி காரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த மோதல் ம் குறித்து விசாரிக்க காவல்துறை இணை ஆணையர் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.