சென்னை,டிச.13- சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசா ரணை கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை ஐஐடியில் தொடர்ச்சியாக இத்தகைய மரணங்கள் நிகழ்வதாலும், பாத்திமா மரணத்தில் பல் வேறு சந்தேகங்கள் இருப்ப தாலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராய ணன், சேஷசாயி அமர்வு, ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சிபிஐ-யில் பணியாற்றிய இரு அதிகாரிகள் அடங்கிய குழு, பாத்திமா மரணம் குறித்து விசாரிப்பதாக அரசுத்தரப்பில் அளித்த விளக்கத்தை ஏற்று, மனுவை தள்ளுபடி செய்வ தாக நீதிபதிகள் கூறியுள்ள னர். மேலும் மனுவில் போதிய ஆவண ஆதாரங்கள் இல்லை என உத்தரவில் தெரிவித்துள்ள நீதிபதிகள், மாணவ-மாணவிகளுக்கு தேவையான மன நல ஆலோ சனை வழங்க ஐஐடி நிர்வா கத்திற்கு உத்தரவிட்டனர்.