சென்னை, மே 22 - போலி சித்த வைத்தியர் திருத்தணிகாசலம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டார். சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் திருத் தணிகாசலம் (வயது 50). பி.எஸ்சி பட்டதாரியான இவர் தன்னை சித்த வைத்தியர் என்று சொல்லி சென்னை தி.நகர் நிலை யம் எதிரில் சித்த மருத்துவ மனை நடத்தி வந்தார். இவர் மீது சென்னை மாந கர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோ பதி துறை இயக்குனர் சார்பில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த புகார் மனுவில், கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ள தாக, திருத்தணிகாசலம் ஊட கங்கள் மற்றும் சமூகவலை தளங்கள் வாயிலாக தவ றான செய்தியை பரவ விட்டுள்ளார் என்றும், அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த புகார் அடிப்ப டையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். திருத்தணிகாசலம், கடந்த 7-ந்தேதி கைது செய்யப் பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப் பட்டார். இதற்கிடையில் திருத் தணிகாசலம் மீது புதிதாக மேலும் 2 வழக்குகள் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்டது. அந்த 2 வழக்குகளிலும் அவர் கைது செய்யப்பட்டார்.அதிலும் அவருக்கு நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டது. எழும்பூர் நீதிமன்றத்தில் அவரது ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, 1 ஆண்டு சிறையில் அடைக்க காவல் துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தர விட்டார். அதன்படி அவர் சிறையில் அடைக்கப் பட்டார்.