tamilnadu

img

ஊரடங்கை தளர்த்துவது கொடிய விளைவுகளை உருவாக்கும்

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவா, ஏப்.11- கொரோனா பரவலல் அதிகரித்து வரும் நிலை யில் ஊரடங்கை உடனடியாகத் தளர்த்துவது மோச மான எதிர் விளைவுகளை (கொடிய மீள் எழுச்சி) ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு உலகநாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.  உலகளவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பலவும் ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தி இருக்கின்றன. இதனால் அத்தியாவசிய காரணங்களை தவிர மக்கள் வெளியே வரு வதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. 

இந்நிலையில் ஜெனிவாவில் செய்தியா ளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், “கொரோனா பீதியால் உலகமே வீடுகளுக்குள் அடைந்து கிடக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தாமல் ஊரடங்கை தளர்த்தினால் அது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஊரடங்கை தளர்த்தும் முன்பாக, நோய்ப் பரவலை கட்டுப் படுத்த வேண்டும். போதிய அளவு மருத்துவ வசதி கள் இருக்க வேண்டும். நோய் பாதிப்புகள் கட்டுக்குள் இருக்க வேண்டும். குறிப்பாக பள்ளி கள், அலுவலகங்களில் முன்னெச்சரிக்கை மேற் கொள்ள வேண்டும். சமூக இடைவெளி தொடர வேண்டும்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், பல்வேறு நாடு களில் பத்து சதவீத சுகாதார ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார ஊழியர்களே பாதிக்கப்பட்டுள்ள நிலை யில், நாமும் ஆபத்தில் தான் உள்ளோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ், ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வரு வதாகத் தெரிகிறது, இருப்பினும், மக்கள் வீட்டில் இருப்பதை விலக்கிக்கொண்டால் அது “கொடிய மீள் எழுச்சிக்கு” வழிவகுக்கும் என்றும் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.