tamilnadu

img

நேபாளத்தில் கனமழை

காத்மாண்டு, ஜூலை 15 - நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன்  காரணமாக அந்நாட்டின் பல்வேறு  பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. 28 மாவட்டங் களில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து மின்சாரம் தடைபட்டுள்ளது.  மழையால் நாட்டின் பல தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப் பட்டு மக்கள் கடும் பாதிப்பு களுக்கு உள்ளாகி இருகின்றனர். வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நேபாள காவல்துறை மற்றும் ராணுவத்தினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திங்களன்று காலை நிலவரப்படி வெள்ளப்பெருக்கு, நிலச் சரிவு மற்றும் மழை தொடர்பான  விபத்துகளில் சிக்கி உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. 38 பேர் காய மடைந்திருப்பதாகவும், 30 பேரைக் காணவில்லை என்றும் கூறியுள்ளது.