tamilnadu

தண்டவாளத்தில் இளைஞர் சடலம் - தற்கொலையா ?

ஈரோடு, ஏப்.2-


ஈரோடு, ரங்கம் பாளையம் அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார் என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஈரோடு, ரங்கம் பாளையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் துண்டான நிலையில் கிடப்பதாக, ஈரோடு ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவலர்கள் அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?என்ற விவரம் தெரியவில்லை.  இறந்த நபர் அந்த வழியாக தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா ?என்று தெரியவில்லை.இதுகுறித்து ஈரோடு ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளதால் அந்த குடியிருப்பு பகுதியை சேர்ந்த யாராவது இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறை அந்த பகுதியில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

;