tamilnadu

img

சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலி - காவல்துறையினர் விசாரணை

ஈரோடு, ஜூன் 11- ஈரோடு அருகே வீட்டின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலியானார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்ற னர். ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம், கக் கன் நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் ராகனி தம்பதியினர். இவர்களுக்கு ஜீவித்குமார் என்ற மக னும் , ருத்ராபிரியா என்ற மகளும் உள்ளனர். இவர் குடியிருக்கும் தெருவில் சாக்கடை அமைப்பதற்காக ஈரோடு மாநகராட்சி சார்பில் பள்ளம் தோண்டப் பட்டு வருகிறது. பிரேம்குமாரின் வீட்டின் காம்ப வுண்ட் சுவர் அருகே சாக்கடை அமைக்க ஆழமாக பள்ளம் தோண்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந் நிலையில், செவ்வாயன்று இரவு குழந்தைகள் இருவரும் காம்பவுண்ட் சுவர் அருகே நின்று கொண் டிருக்கும் போது எதிர்பாரவிதமாக காம்பவுண்ட் சுவர் ஜீவித்குமார் மற்றும் ருத்ராபிரியா மீது விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே 3 வய தான ருத்ராபிரியா பலியானார் மேலும் படுகா யமடைந்த ஜீவித்குமார் ஈரோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுகிறது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கருங் கல்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;