ஈரோடு, ஜூன் 4-தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. மாநில கவுரவத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தாக்குதல்....
மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவு ஆவணத்தை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிட்டுள்ளதை ஓர் அநீதியான பாகுபாடு என்று தமுஎகச கண்டிக்கிறது. எதிர்காலத் தலைமுறையினர் வாழ்வில் ஆழ்ந்த தாக்கம் ஏற்படுத்தக் கூடிய இந்த வரைவுமீது கருத்துக்கூற குடிமக்களுக்குள்ள ஜனநாயக உரிமையை மதிக்கும் விதமாக இவ்வரைவை மத்திய அரசே தமிழ் உள்ளிட்ட தேசிய மொழிகள் அனைத்திலும் வெளியிடவேண்டும்.பெரும் பகுதி மக்களின் கவனத்திற்கு கொண்டுவராமலே கருத்து கேட்கப்பட்டதாக கணக்குக் காட்டிவிட்டு ஒரு கொள்கையை இறுதிப் படுத்துவது நாட்டின் ஒருமைப்பாட்டிற் கும் ஜனநாயக மாண்புகளுக்கும் எதிரானது. எனவே வரைவின் மீது கருத்துக் கூறுவதற்கு போதிய கால அவகாசம் வழங்கும் விதமாக ஜூன் 30 என்றுள்ள இப்போதைய காலக் கெடுவை விலக்கிக்கொள்ள வேண்டும்.
இந்தி திணிப்பு....
மும்மொழித் திட்டம் என்ற பெயரில் இந்தி பேசாத மாநிலங்களின் இடைநிலைப்பள்ளிகளில் இந்தியை ஒரு கட்டாய மொழிப் பாடமா கத் திணிப்பதற்கான பரிந்துரை இந்த வரைவில் முன்வைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கிளம்பிய கண்டத்திற்குப் பிறகு இப்பரிந்துரையை நீக்கி மத்திய அரசு இப்போதைக்கு பின்வாங்கியுள்ளது. தற்போதுள்ள இருமொழிக் கொள்கை தொடர வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமுஎகச உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் இதில் கருத் தொற்றுமை உள்ளவர்களும் மத்திய அரசுக்கு மின்னஞ்சல் அனுப்பும் இயக் கத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது
பெயர் மாற்றம்....
ஈரோடு நகரில் எளிய மக்களுக்குக் கல்வி, மருத்துவம், பொருளா தார மேம்பாடு, பெண்கள் முன்னேற்றம் சார்ந்து தொண்டாற்றியவர் கிறிஸ் துவ சமயப் பணியாளர் அந்தோணி வாட்சன் பிரப். ஆசிரியர் பயிற்சிப் பள்ளி நிறுவி அடித்தட்டுக் குடும் பங்களைச் சேர்ந்தோர் ஆசிரியராவதற்கும், 94 பள்ளிகளை நிறுவி இப்பகுதியில் கல்வி பரவவும் வழிவகுத்தவர். அவர் உருவாக்கிய மருத்துவமனை இன்றும் ஈரோடு சிஎஸ்ஐ மருத்துவமனை என்ற பெயரில் பணியாற்றி வருகிறது. ஈரோடு நகர்மன்றத் தலைவராகவும் (1904-05) தேர்ந்தெடுக்கப்பட்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற் கொண்டார். புதியதொரு சாலைக்கு காந்திஜி சாலை என்று பெயர்சூட்ட வைத்தார். அவரது மனிதநேயத் தொண்டுகளை அங்கீகரிக்கும் வகையில் 80 ஆண்டுகளுக்கு முன், ஈரோடு நகராட்சி அப்போது ஏற் படுத்தப்பட்ட புதிய சாலைக்கு பிரப் சாலை என்று பெயர் சூட்டி கௌரவித்தது. நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் இருந்து வந்த இப்பெயரை நகர மக்கள் எவ்வித மனத்தடையுமின்றிப் பயன்படுத்தி வந்துள்ளனர்.ஆனால், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரியில் திடீரென பிரப் சாலைக்கு வேறு பெயரை அறிவித்திருக்கிறார். நல்லிணக்கத்தை விரும்பாத ஆர்எஸ் எஸ்சின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்தே இந்தப் பெயர்மாற்றம் நடந்துள்ளது என்று ஜனநாயக சக்திகள் விமர் சிக்கின்றன. வட மாநிலங்களில் சாலைகளுக்கும் ஊர்களுக்கும் ரயில் நிலையங்களுக்கும் இருந்து வந்த இஸ்லாமியப் பெயர்களை பாஜக அரசுகள் மாற்றி அடையாள அழிப்பை மேற்கொள்வதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் இவ்வாறு ஒரு மக்கள் தொண்டரின் பெயர் கிருஸ்தவர் என்பதற்காகவே மாற்றப்பட்டிருப்பது கவலைக்குரிய போக்கின் அறிகுறியாகும். பழைய பிரப் சாலை என்ற பெயரே தொடர வேண்டும் என்று கோருகிற தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர் இதற்காக மேற்கொண்டுள்ள முயற்சிகளில் தமுஎகச தன்னையும் இணைத்துக் கொள்கிறது.
தமிழர்களுக்கே முன்னுரிமை
தமிழ்நாட்டில் மாநில, மத்திய அரசுப் பணிகளிலும், தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை என தமிழக அரசு உரிய சட்டம் இயற்றிச் செயல்படுத்த தமுஎகச மாநிலச் செயற் குழு கோருகிறது. இந்தியாவின் பிற மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தவர்க்கு வேலைவாய்ப்பு முன்னுரிமை அளிக்கும் சட்டம் இருப்பதை தமுஎகச சுட்டிக் காட்டுகிறது. இங்கு வந்து பணியாற்றுவோர் கட்டாயமாகத் தமிழ் பேசவும் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும்.
ஆடைக்கட்டுப்பாடு
அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கான புதிய ஆடைக் கட்டுப்பாடு விதிகள் அறிவிக்கப் பட்டுள்ளன. தனிமனித ஆடைத் தேர்வு சுதந்திரத்தைப் பறிக்கிற, பணியாளர்களின் சுயமரியாதைக்கு பங்கம் விளைவிக்கிற இந்த ஆணையை அரசு திரும்பப் பெற வேண்டும்.
அரசுப்பள்ளிகளை பாதுகாப்போம்...
அரசுப்பள்ளிகளை பாதுகாப்பதற்கென போராடி வரும் இந்திய மாணவர் சங்கத்தினரை செயற்குழு பாராட்டுகிறது. போராடிவரும் அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அரசியல் அழுத்தத்தை கல்விப்பரவலில் அக்கறையுள்ள அனைவரும் உருவாக்கவேண்டும்.இவ்வாறு இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.