tamilnadu

img

போட்டி தேர்விற்கு உதவியோருக்கு டாஸ்மாக் ஊழியர் சங்கம் பாராட்டு விழா

ஈரோடு, ஜன. 19- டாஸ்மாக் நிறுவனத்தில் இளநிலை உதவி யாளர் பணியிட தேர்விற்காக நடைபெற்ற இலவச  பயிற்சி வகுப்பிற்கு உதவியவர்களுக்கு சிஐடியு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.  டாஸ்மாக் நிறுவனத்தில் இளநிலை உதவி யாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு கடந்த 18.8.2019 அன்று நடைபெற்றது. இதில்  பங்கேற்க சிஐடியு ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் மற்றும் பாரதி இலவச டிஎன்பி எஸ்சி பயிற்சி மையம் இணைந்து ஈரோடு கலைக் கல்லூரியில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற 5 பேர் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந் துள்ளனர். இந்நிலையில் வகுப்புகள் நடத்த உதவிய ஈரோடு கலைக்கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள், பாரதி இலவச பயிற்சி மையம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி ஞாயிறன்று நடை பெற்றது.  டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐடியு) நடத்திய  இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் என்.முருகையா தலைமை வகித்தார். பொது செய லாளர் வி.பாண்டியன் வரவேற்றார். ஈரோடு  கலைக்கல்லூரியின் முதல்வர் ஆர்.வெங்கடாச லம், பொருளியல் துறை தலைவர் என்.மணி, சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், செயலாளர் எச்.ஸ்ரீராம் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். இதில் சிறப்பு விருந்தி னர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் பொருளாளர் வி.ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில் சம்மேளன துணைத் தலைவர் பொன்.பாரதி நன்றி கூறினார்.

;