ஈரோடு, மே 7- கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை மூன்றாவது முறையாக நீடிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள மதுபானக் கடை கள் திறப்பிற்கு டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சிஐடியு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர்சி.கதிர வனிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட் டம் சிவப்பு மண்டலமாக இருந்து ஆரஞ்சு மண்டலமாகவும், பச்சை மண்டலமாகவும் மாறியுள்ளது. இந் நிலையில் அரசு மதுக்கடைகளைத் திறப்பது கொரோனா பரவல் தடுப் பில் நமது மாவட்டத்தின் சீரிய நடவடிக்கைகளுக்குப் பயனளிக்காது.
ஊரடங்கு முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்பட்ட பின்இயல்பு வாழ்க்கை சீரான பிறகுமதுக் கடைகளைத் திறப்பதுதான் சரியாக இருக்கும். அதேநேரம், கடைகளைத் திறப் பது என்ற அரசின் முடிவு உறுதியாக் கப்பட்டால் கடை ஊழியர்கள் பணி யாற்றும் போது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை சமூகஇடை வெளியுடன் வரிசைப்படுத்துதல், விற் பனை பணம் கையாளுதல், வங்கி களுக்குக் கொண்டு செல்லுதல் ஆகியபணிகளுக்கு உரிய பாதுகாப்பு உத்தரவாதப்படுத்த வேண்டும். மேலும், ஊழியர்கள் அனை வருமே கடை அமைந்துள்ள இடத்தின் அருகாமையில் வாழ்பவர்கள் அல்ல. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளி லிருந்தும், பிற மாவட்டங்களைச் சார்ந்தவர்கள் கணிசமாக உள்ளனர். எனவே, அவர்கள் பணிக்கு வருவதற் கும் பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற் கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
காவல் துறையின் அத்துமீறல்
இதற்கிடையே, டாஸ்மாக் மதுக் கடைகள் திறப்பது என்ற அரசு அறி விப்பு வந்தவுடன் ஈரோடு மாவட்டத் தில் காவல் துறை ஆய்வாளர்கள் டாஸ்மாக் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியாமல் தங்கள் நிலைய சரகத் திற்குட்பட்ட கடை ஊழியர்களை அழைத்து கூட்டம் நடத்தியுள்ளனர். இக்கூட்டத்தில் காவல் துறை அலு வலர்கள் கடையின் முன்னாள் 6 அடி இடை வெளியில் 100 பேருக்கு குறை வில்லாமல் வரிசையில் நிற்பதற்கு கட் டைகள் வைத்து தடுப்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள னர். மேலும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமலோ அல்லது தள்ளு முள்ளு ஏற்பட்டாலோ அனைத்திற்கும் கடை ஊழியர்கள்தான் பொறுப்பு என தெரிவித்துள்ளனர்.
கடையில் மது விற்பனை, விற் பனைத் தொகையை வங்கியில் செலுத் துவது, சரக்கு இருப்பை பராமரிப்பது என்பதுதான் கடை ஊழியர்களின் பணியும் பொறுப்பும் ஆகும். தடுப்பு கட் டைகள் அமைக்க வேண்டும் என்று காவல் துறை சொல்வது சரியான தாக இருந்தாலும், இதற்கான செலவினத்தை டாஸ்மாக் நிர்வாகம் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனைவிடுத்து ஊழியர்களைப் பொறுப்பேற்கச் சொல்வது முறையற் றது. எனவே, கடை மேற்பார்வையா ளர்கள் மூலம் அதற்கான செலவுத் தொகையை கொடுப்பது என்பதுதான் சரியானதாக இருக்கும். அதேபோல் கொரோனா தடுப்பிலிருந்து கடை ஊழியர்களைப் பாதுகாக்க பணியாற் றும்போது கையுறை, முகக் கவசம், சானிடைசர் ஆகியவை தேவையான அளவிற்கு கொடுக்க வேண்டும் என சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ர மணியன், டாஸ்மாக் ஊழியர் சங்கத் தின் பொதுச்செயலாளர் வை.பாண்டி யன் உள்ளிட்டோர் அளித்த மனுவில் கூறப்பட்டிருந்தது.