கோபி, பிப். 20- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஆப்பக்கூடலில் செயல்படும் தனியார் வேளாண்மைக் கல்லூரி யின் மூன்றாம் ஆண்டு மாணவ, மாண விகள் சார்பில் நெல் வயல் திரு விழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள ஆப்பக் கூடல் பகுதியில் செயல்படும் தனியார் வேளாண் கல்லூரியில் மூன்றா மாண்டு பயிலும் மாணவ, மாணவிக ளுக்கு தலா 5 செண்ட் விளைநிலம் கல்லூரி சார்பில் ஒதுக்கீடு செய்யப் பட்டது. அதில் மாணவ, மாணவிகள் வேளாண்மை பல்கலைக்கழத்தின் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட வைகை அணை ஒன்று என்ற புதிய நெல் ரகத்தை சாகுபடி செய்திருந்தனர். இந்நிலையில், அறுவடைக்கு தயாராக உள்ள வைகை அணை ஒன்று என்ற நெல் ரகத்தை விவசாயிகள் மத்தியில் அறிமுகம் செய்யவேண்டும் என்ற எண்ணத்திலும், வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகளின் சாகுபடிகள் குறித்து விவசாயி கள் கருத்துகளை தெரிந்துகொள்வ தற்காகவும், நெல் வயல் திருவிழா என்ற தலைப்பில் நிகழ்ச்சியை நடத்தி னர். இதில் மாணவ, மாணவிகள் விதை நேர்த்தி, நெல் வயலை தயார்ப டுத்திய விதம், எந்தெந்தப் பருவத்தில் உரமிட்டது, களையெடுத்தல் போன்ற அனைத்து சாகுபடி முறைகளையும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். மேலும், இந்த புதிய இரக நெல் பயிர் நடுத்தர உயரத்துடன் செங்குத் தாக வளரும் தன்மை கொண்டது எனவும், முதிர்ச்சியில் சாயா தன்மை கொண்டது எனவும், சீரக சம்பாவை போல் சமைப்பதற்கு ஏதுவதாகவும் அதிக சுவையுடனும் இருக்கும் என்றும் இந்த அரிசியின் மூலம் இலைசுருட்டு குலைநோய் மற்றும் இலைப்புள்ளி நோய்களுக்கு மித மான எதிர்ப்புதிறன் கொண்டது என்றும் விவசாயிகளுக்கு மாணவ, மாணவிகள் விளக்கினர். இந்த நெல் வயல் திருவிழாவில் கோவை வேளாண்மை பல்கலைக்க ழக வேளாண் விஞ்ஞானிகள் வேளாண்மைத்துறை அதிகாரிகள் அலுவலர்கள் மற்றும் விவசாயிக ளென ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்.