tamilnadu

img

மீண்டும் ஒத்த ஓட்டு வாங்கிய பாஜக!  

பவானி சாகர் பேரூராட்சி 11வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நரேந்திரன் ஒரே ஒரு ஓட்டு வாங்கியுள்ளார்.  

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமை(பிப்.19) அன்று நடைபெற்றது.  அதனை தொடர்ந்து நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.  

பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.  நடைபெற்ற இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பவானிசாகர் பேரூராட்சி 11வது வார்டில் பாஜக வேட்பாளர் நரேந்திரன் போட்டியிட்டுள்ளார்.    இந்நிலையில் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர் நரேந்திரன் ஒரே ஒரு ஓட்டு வாங்கியுள்ளார்.

பாஜக வேட்பாளரின் ஓட்டை தவிர அவரது குடும்பத்தினரோ, நண்பரோ கூட வாக்களிக்காததால் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார்.  

முன்னதாக கோவையில் கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில், குருடம்பாளையம் 9வது வார்டு முடிவுகள் வெளியானது. அதில் போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த கார்த்திக் என்ற வேட்பாளர் ஒரே ஒரு ஓட்டு மட்டும் வாங்கி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. 

;