கோபி, பிப். 23- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப் பள்ளம் அணையின் உபரிநீர் ஓடையில் இரண்டு தடுப் பணைகள் கட்டுவதற்கு ஞாயிறன்று தமிழக பள்ளிக்கல் வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கட்டு மானப்பணியை அடிக்கல்நாட்டி தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து மழைக் காலங்களில் அதிகளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டு பவானி ஆற்றில் வீணாகக் கலக்கிறது. இதனால் குண் டேரிப்பள்ளம் அணையின் உபரிநீர் ஓடையில் இரண்டு தடுப்பணைகள் கட்டவேண்டும் என்றும் அப்பகுதி விவ சாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்த னர். இந்நிலையில் தமிழக அரசு குண்டேரிப்பள்ளம் அணை யின் உபரிநீர் ஓடையில் இரண்டு தடுப்பணைகள் கட்டுவதற்கு ரூ.7.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதன் அடிப்படையில் தடுப்பணை கட்டுவதற்கான கட்டு மானப்பணியை ஞாயிறன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, 90 பயனாளி களுக்கு முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா என ரூ.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். முன்னதாக, பெரும்பள்ளம் ஓடையில் தாசப்பகவுண் டன்புதூரில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டுவதற்கும் கொங்கர்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் மூன்று கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்வதை தடுக்க காற்றாற்று ஓடையின் குறுக்கே பாலம் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் கோட்டாட்சியர் ஜெயராமன், வட்டாட் சியர் விஜயகுமார் பொதுப்பணித்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.