tamilnadu

img

பள்ளி திறப்பது குறித்து பெற்றோர்களிடம் ஆலோசிக்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

கோபி, ஜூன் 3- பள்ளி திறப்பது குறித்து, 10 வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து தேர்வு முடிவுகள் வெளியான பிறகே பெற் றோர்களை அழைத்து பேசி முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரி வித்துள்ளார்.  ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியில் செல்லும் தடப்பள்ளி பாசன வாய்க்காலில் சுமார் ரூ.2 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் குடிமராமத்து  பணியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் தொடங்கி வைத்தார். அதனைதொடர்ந்து செய்தி யாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், பள்ளி திறப்பது குறித்து 10 வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து தேர்வு முடிவுகள் வெளியான பிறகே பெற்றோர்களை அழைத்து பேசி முடிவு செய்யப்படும். தற்போது பாடங்கள் குறைப் பது குறித்து மட்டுமே 16 பேர் கொண்ட உயர்மட்டக்குழு ஆய்வு செய்து வருகிறது என்றார்.  மேலும், அத்திக்கடவு -அவிநாசி திட்டம் மூன்று கட்டங்க ளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோபிசெட்டிபாளைத் தில் தடப்பள்ளிவாய்க்கால் பாலங்கள் அகலப்படுத்தும் பணிக்காக ரூ. 1.95 கோடி நிதி ஒதுக்கப்பட்டு குடிமராமத்து பணியின் மூலம் நிறைவேற்றப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கதி ரவன், கோட்டாட்சியர் ஜெயராமன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.