கோபி, மே 26 - ஜோதிடத்தின் மீது கொண்ட நம்பிக்கையால் தன் கர்ப்பத்தை கலைத்த கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கோபிசெட்டிபாளையம், அம்மாபேட்டை அடுத்துள்ள பெரியஏரித்தோட்டம் பகு தியை சேர்ந்தவர் ரம்யா (25). இவரது கணவர் முனுசாமி (30)கூலித்தொழிலாளி யாக வேலைசெய்து வருகிறார். இவர் கள் இருவருக்கும் கடந்த ஆறு வருடங் களுக்கு முன்பு திருமணமாகி, ஐந்து வயதில் ஒரு மகன் உள்ளார். தற்போது ரம்யா மூன்றுமாத கர்ப்பிணியாக இருந் துள்ள நிலையில்,ஞாயிறன்று முனு சாமி குடிபோதையில் வந்துள்ளார். அப் போது, ரம்யா வயிற்றில் வளரும் குழந்தை பிறந்தால் தான் இறந்து விடுவதாக ஜோசியர் கூறியதாகவும், அதனால் ரம்யா கருகலைப்பு செய்ய வேண்டுமெனவும் வற்புறுத்தியுள்ளார்.
இதற்கு அவரது மனைவி மறுப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையே தக ராறு ஏற்பட்டுள்ளது. இத்தக ராறு முற்றிப்போக, ரம் யாவை வயிற்றில் எட்டி உதைத்துள்ளார். இதில், வலி தாங்கமுடியமால் அலறிய ரம்யாவின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு குருவரெட்டி யூர் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே மருத்துவர்கள் ரம்யாவை பரிசோதனை செய்த தில், கர்ப்பம் கலைந்துவிட்டதாக கூறியுள்ள னர்.இதில் அதிர்ச்சி அடைந்த ரம்யா, தனது கர்ப்பம் கலைய காரணமான கணவர் முனுசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் முனுசாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.