tamilnadu

img

ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

ஈரோடு கிழக்கு தொகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. 
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா அண்மையில் காலமானார். அவர் மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளராக தென்னரசு, தேமுக வேட்பாளராக ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதை தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், 5 மணி நிலவரப்படி 70.58% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை 77,183 ஆண்கள், 83,407 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 13 பேர்  வாக்களித்துள்ளனர். இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.