ஈரோடு ரயில் நிலையத்தில் தவித்த கேரளாவை சேர்ந்த சிறுவன் மீட்பு
ஈரோடு, ஜூன் 13- ஈரோடு ரயில் நிலையத்தில் தவித்த கேரளாவை சேர்ந்த சிறுவனை ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் மீட்டனர். ஈரோடு ரயில் நிலையத்தில் நடைமேடை 2ல் ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் புதனன்று ரோந்து மேற்கொண்டனர். அப்போது அங்கு 16வயது சிறுவன் எங்கு செல்வது என தெரியாமல் தனியாக சுற்றி திரிந்து கொண்டிருந்தான். இதைப்பார்த்த காவலர்கள் சிறுவனைப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், சிறுவன் கேரள மாநிலம் கண்ணூர் படியோட்சால் பொன்னம்வயல் பகுதியை சேர்ந்த நவ்சாத் என்பவரது மகன் முகமது சாகிர் என்பதும், அவரது அம்மா திட்டிய தால் வீட்டை விட்டு வெளியேறி ரயில் மூலம் ஈரோடு வந்ததாகவும், பின்னர் எங்கு செல்வது என தெரியாமல் நிற்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை காவ லர்கள் அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், கேரளாவில் இருந்து ஈரோடு வந்த அவரது குடும்பத்தினரிடம் சிறுவனுக்கு அறிவுரை கூறி, காவல்துறையினர் பத்திரமாக ஒப்படைத்தனர்.
மின்தடை
ஈரோடு, ஜூன் 13- ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம் சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி வெள்ளி யன்று நடைபெற உள்ளது. இதனால் பெருந்துறை வடக்கு மற்றும் நகர் பகுதிக்கு உட்பட்ட இடங் களான சிப்காட் வளா கம் (சிப்காட் வளாகம் தெற்கு பகுதி தவிர), ஓலப் பாளையம், திருவாச்சி, கந்தாம்பாளையம், வள்ளி யம்பாளையம், பெரிய மடத்துப்பாளையம், சின்ன மடத்துப்பாளையம், மாயா அவெண்யூ, சேனிடோரியம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக் கப்பட்டுள்ளது.