பாதாள சாக்கடை இணைப்பிற்கு பணம் வசூல் தடுக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை மனு
ஈரோடு, டிச. 2- ஈரோடு மாநகராட்சி பகுதியில் பாதாள சாக் கடை திட்டத்துக்காக வீடுகளுக்கு இணைப்பு வழங்கும்போது, அவர்களிடமிருந்து பணம் வசூ லிப்பதை தடுக்க கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு தாலுகா செயலாளர் எம்.நாச்சிமுத்து தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, ஈரோடு மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்கு, வீடுகளுக்கு இணைப்பு வழங் கப்படுகிறது. இந்த இணைப்புக்காக குறிப்பிட்ட தொகையை, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். அத்தொகையை ஒரே தவணையிலோ அல்லது குறிப்பிட்ட தவணையிலோ செலுத்தலாம் என மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் அறி வித்துள்ளார். ஆனால், வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் போது, குறிப்பிட்ட தொகை வழங்கினால் மட்டுமே இணைப்பு தருகிறார்கள். அல்லது இணைப்பு வழங்காமல் சென்றுவிடுகின்றனர். சில வீடுக ளில், பணம் வழங்கினாலும், அதற்கான ரசீதும் வழங்குவதில்லை. இதுபற்றி விசாரித்து, பொது மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் செயலை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் இதுவரை பணம் பெறப்பட்ட வீடுகளுக்கு, அத்தொகையை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும், என அம்மனு வில் கோரப்பட்டுள்ளது.
சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற 39 ஆயிரம் பேர் விண்ணப்பம்
ஈரோடு, டிச. 2- ஈரோடு மாவட்டத்தில் சர்க்கரை கார்டு வை திருப்போர், அரிசி கார்டாக மாற்றம் செய்ய 39 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய் துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் தற்போது, 1,141 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஸ்மார்ட் கார்டு தாரர்களாக பயன்பெறுகின்றனர். இந்நிலையில் சர்க்கரை கார்டு வைத்திருப்போர், அரிசி கார்டாக மாற்றம் செய்து கொள்ள தமிழக அரசு அறிவிப்பு செய்திருந்தது. இதற்கு இணையத்தின் வாயிலா கவோ அல்லது நேரடியாகவோ நியாய விலைக் கடை, மாவட்ட மற்றும் வட்ட வழங்கல் அலுவல கம் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்திருந்த னர். இந்நிலையில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் ஆன்லைன் மற்றும் வட்ட வழங்கல் அலுவ லகம் மூலம் விண்ணப்பம் செய்துள்ளனர். இதுகுறித்து, மாவட்ட வழங்கல் பிரிவு அலுவ லர்கள் கூறுகையில், ஆன்லைன் மற்றும் நேரில் விண்ணப்பம் வழங்கியவர்களுக்கு, உடனடியாக பதிவு எண் வழங்கப்படுகிறது. அவ்வாறு விண் ணப்பிக்கப்பட்ட, 39,517 சர்க்கரை கார்டுகளும், உடனுக்குடன் அரிசி கார்டாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பம் செய்துள்ளவர்கள், அரிசி கார்டாக மாற்றப்பட்டுள்ளதா என்பதை, ஓரிரு நாட்களுக்குப்பின், அவர்களுக்கான நியாய விலைக் கடைகளில் விசாரித்து அறிந்து கொள்ள லாம், இவ்வாறு கூறினர்.