tamilnadu

ஈரோடு, நீலகிரி, கோவை முக்கிய செய்திகள்

ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை குறைந்தது வியாபாரிகள் வேதனை
ஈரோடு, செப். 10- ஈரோடு ஜவுளி சந்தையான கனிமார்கெட்டில் விற்பனை குறைந்ததால் ஜவுளி வியாபாரிகள் வேதனையடைந்துள்ளனர். ஈரோடு மாநகராட்சி பன்னீர் செல்வம் பூங்கா பகுதி யில் அமைந்துள்ளது கனி மார்கெட் ஜவுளி சந்தை. இந்த சந்தையில் 700 க்கு மேற்பட்ட வார சந்தை கடைகளும், 300 க்கும் மேற்பட்ட தினசரி கடைகளும் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், அப்பகுதியில் வணிக வளாகம் கட்டுவதற்காக மாநகராட்சி நிர்வாகம் கடைகளை அகற்றியது. இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆண்டு ரூ.4 லட்சம் வரை விற்பனை செய் யப்பட்ட நிலையில், நடப்பாண்டு ஒரு லட்சத்தை  கூட தொட முடியாத நிலை உள்ளது. விரைவில்  அடுத்து வரவிருக்கும் தீபாவளி விற்பனைக்காக வணிக வளாகம்அமைத்துக் கொடுக்கப்பட்டால் மட்டுமே வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாது காக்கப்படும். மேலும் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் தினசரி கடை வேலைகளை விரைவாக முடிக்க வேண்டும்.  ஜவுளி சந்தையில் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளதால் 600க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டமே குறைந்த ஓரிடத்தில் தற்காலிக ஜவுளி சந்தைக்கு இடம் கொடுக்கப்பட்டது. அதனால் எந்த பயனும் இல்லை. எனவே விரைவில் கடைகளை சீரமைத்து வளாகம் கட்டி கொடுக்கப்பட்டால் ஜவுளி வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது.

மின் இணைப்பு பெற தடையில்லா சான்று கேட்டு நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
உதகை, செப்.10- மின் இணைப்பு பெற தடையில்லா சான்று வழங்க வேண்டும் என வலியுறுத்தி வாழைத்தோட்ட பகுதி பொதுமக்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் தனிதனியாக மனு அளித்தனர். நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடை பெற்றது. இதில், மசினகுடி அருகில் உள்ள வாழைத் தோட்டத்தை சார்ந்த பொதுமக்கள் மனுக்களோடு வந்திருந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக வாழைத்தோட்ட பகுதியில் வசித்து வரும் எங்கள் வீடுகளுக்கு மின்சார வசதி கிடையாது. இதனால் பள்ளி செல்லும் எங்கள் குழந்தைகள் இரவு வீட்டில் வீட்டு பாடங்களை எழுதி முடிக்கவும், பாடங்களை படிக்கவும் முடிவ தில்லை. இதனால், குழந்தைகளின் எதிர்காலம் பாழாகி விடும் என்று பயமாக உள்ளது. மேலும் அரசு கொடுத்துள்ள டிவி, மிக்சி, கிரைண்டர், லேப்டாப்  உள்ளிட்ட மின்சாதன பொருட்களை இதுவரையிலும் பயன்படுத்திட முடியவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு எங்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு கிடைக்க தடையில்லா சான்று அளித்து உதவவேண்டும் என தெரிவித்தனர்.

கோவையில் தந்தையுடன் இரண்டு சிறுமிகள் மாயம்
கோவை, செப்.10- கோவையில் தந்தையுடன் சென்ற இரண்டு சிறு மிகள் திடீரென மாயமானதையடுத்து தொடர்ந்து, தாய் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். கோவை சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள ஸ்ரீநாத் லேக் வியூ குடியிருப்பில் வசித்து வருபவர்கள் ஆஸ்வின் டெரி சாம் (37) மற்றும் கிரிஸ்டி ரொசோ ரியோ தம்பதியினர். இந்த தம்பதிகளுக்கு ஷாஷா லெட்டிசியா (9) சாரா லெட்டிசியா (4) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஆஸ்வின்டெரிசாம் தனது இரண்டு பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அருகிலுள்ள மாலுக்கு செல்வதாக தனது மனைவி யிடம் சொல்லி சென்றுள்ளார். ஆனால் வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் வீடு திரும்ப வில்லை. இதையடுத்து குழந்தைகளின் தாயார் தனது குழந்தைகளையும் கணவரையும் மீட்டு தரக்கோரி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து மாநகர காவல் ஆணையாளர் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து குழந்தைகளை தேடி வருகின்றனர்.

கொப்பரை மோசடி வழக்கில் 5 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி 
பொள்ளாச்சி, செப்.10- பொள்ளாச்சியில் கடந்த மாதம் கொப்பரை கொள்முதல் செய்து மீதி பணம் தராமல் ஏமாற்றி மோசடி செய்த வழக்கில் 5 பேரின் ஜாமின் மனுவை பொள்ளாச்சி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத் திரவிட்டது.  கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த கோமங் கலத்தை சேர்ந்தவர் பிரேமானந்த் (52). இவர் கொப் பரை தேங்காய்களை மொத்தமாக விற்பனை செய்து வருகிறார். இவரிடம் பொள்ளாச்சி அடுத்த நெகமம் அருகே உள்ள கோப்பனூர் புதூரைச் சேர்ந்த  கொப்பரை முகவர்களான சிவகுமார் (41), ராதா கிருஷ்ணன் (61), மனோஜ் குமார் (25), சக்தி வடி வேல் (53), வேணுகோபால் (50) ஆகியோர் கடந் தாண்டு ரூ.2.18 கோடி மதிப்புள்ள 12 லோடு கொப் பரை தேங்காய்களை மொத்த கொள்முதல் செய்து  சென்றுள்ளனர். முன் தொகையாக ரூ.72 லட்சம் பிரேமானந்திடம் கொடுத்துள்ளனர். மீதி தொகை யினை பின்னர் தருவதாக கூறிச் சென்றுள்ளதாக தெரிகிறது. இதன் பின்னர் மீதித்தொகையான ரூ.1.46. கோடி தொகையினை தராமல் மோசடி செய்துள் ளனர். இதனையடுத்து பிரேமானந்த் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறை யினர் மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கடந்த மாதம் ஆக.29 ஆம் தேதி கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவர்களின் ஜாமின் மனுவை பொள்ளாச்சி ஜே.எம் 1 நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வழக்கு குறித்து விசாரித்த நீதிபதி தங்கமணி கணேஷ், மோசடி வழக்கில் கைதான ஐந்து பேரின் ஜாமின் மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.