tamilnadu

img

தோழர் அசோக் படுகொலையை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜூன் 18- நெல்லையில் தோழர் அசோக் சாதிய ஆதிக்க சக்தியினரால் படுகொலை செய் யப்பட்டதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஈரோட்டில் திங்க ளன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட பொருளாளர் தோழர் எம்.அசோக் படுகொலையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள் ப.மாரிமுத்து, ஆர்.கோமதி, ஜி.பழனிசாமி, எஸ்.முத்துசாமி, சி.பரம சிவம், கே.துரைராஜ், நகர செயலாளர் பி.சுந்தரராஜன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.சசி, விவசாய தொழிலாளர் கள் சங்க மாவட்ட செயலாளர் கே.சண்முக வள்ளி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் எம்.அண்ணாதுரை, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் பி.எஸ்.பிர சன்னா, சிஐடியு மாவட்ட துணை செயலா ளர் ரவி  மற்றும்  பாலு உட்பட பலர் பங் கேற்றனர்.