ஈரோடு, அக். 24- ஈரோட்டில் காவல்துறையினரால் புனையப்பட்ட பொய் வழக்கிலிருந்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஈரோட்டில் தந்தை பெரியார் தலை மையில் 1952 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசு கல்லூரியாக்க வேண்டும் என்ற கோரிக் கையை முன்வைத்து இந்திய மாணவர் சங்கம் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின் றனர். இதன்ஒருபகுதியாக, கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப் பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது, போராடும் மாணவர்களை மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் உள் ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியின் தலை வர்கள் சந்தித்து தங்களது ஆதரவை தெரி வித்து போராட்டத்தில் பங்கேற்றனர். இந்நிலையில், இந்த போராட்டங்கள் நடைபெற்று 6 மாதங்கள் கடந்த நிலையில், அன்றைய மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரிமுத்து, சிஐ டியு மாவட்டச் செயலாளர் எஸ்.சுப்பிர மணியன், அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.ஆர்.விஜயராகவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் எம்.அண்ணாத்துரை, மாவட்ட செயலாளர் பி.பழனிச்சாமி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.கோமதி, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.நடராசன், மாவட்ட செயலாளர் செ.விமலா, அரசு ஊழியர் சங் கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் க.ராஜ்குமார், வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.பாலசுப்பிரமணியன், கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் வி.செல்லத்துரை ஆகியோர் மீது காவல் துறையினர் பொய் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த நிலையில் மேற்படி வழக்கில் அக்.21 ஆம் தேதியன்று (திங்க ளன்று) தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றங்கள் நிரூபிக்கப்படாத காரணத்தி னால் அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.