tamilnadu

ஈரோடு அரசு மருத்துவமனையில் 250 படுக்கைகளுடன் கொரோனா வார்டு அமைப்பு

ஈரோடு, ஜூலை 11- ஈரோடு அரசு மருத்துவமனையில் சுமார் 250 படுக்கை வசதிகளுடன் கொரோனா வார்டு அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.  

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அறிகுறி இருப்பவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சுமார் 250 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா வார்டு அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து மருத் துவமனை வளாகத்தில் தற்போது உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் புறநோயாளிகள் பிரிவினை காலி செய்து அங்கு கொரோனா சிறப்பு வார்டு அமைக்கும் பணி தொடங் கப்பட்டுள்ளது. இதற்காக அந்த வார்டில் இருந்த நோயாளி கள் அனைவரும் வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டு கொரோனா வார்டாக மாற்றும் பணி தொடங்கப்பட்டுள் ளது.

இந்த வார்டில் சுமார் 250 படுக்கை வசதிகள் அமைக் கும் அளவுக்கு இட வசதி உள்ளதால் கொரோனா அறிகுறிக ளுடன் இருப்பவர்கள் என தனித்தனியாக தங்க வைக்கப் பட்டு சிகிச்சை அளிக்க முடியும் என்று சுகாதாரத்துறை அதி காரிகள் தெரிவித்தனர்.