tamilnadu

img

கான்கீரிட் கலவை லாரி இயந்திரம் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பலி  

ஈரோடு அருகே கான்கீரிட் கலவை லாரி இயந்திரம் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நஞ்சப்பகவுண்டன்புதூர் பகுதியில் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு கான்கீரிட் தளம் அமைக்க சிமெண்ட் கலவை ஏற்றி கொண்டு வாகனம் ஒன்று நஞ்சப்பகவுண்டன்புதூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. சத்தியமங்கலம்-நெகமம் பிரிவு என்ற பகுதியில் குறுகலான சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வாகனம் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாது.

இந்த விபத்தில் லாரியை ஓட்டிவந்த தேனியை சேர்ந்த கருப்புசாமி, லாரியில் பயணித்த பவானிசாகர் காராட்சிகோரை பகுதியை சேர்ந்த முத்தப்பன், கொத்துக்காடு பகுதியை சேர்ந்த சரவணன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.  

இதுகுறித்து தகவலறிந்து வந்த சத்தியமங்கலம் போலீசார் விரைந்து சென்று 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.