ஈரோடு, அக்.1- இந்திய சுதந்திர போராட்ட வீரரும், ஏழை விவசாயிகளையும், விவசாய தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து சாதிய ஒடுக்குமுறை, வர்க்க ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை முன்னேடுத்தவரும், காவேரி டெல்டா மக்களின் ஒப்பற்ற தலைவருமான தோழர் பி.சீனிவாசராவின் நினைவு நாள் புதனன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலத்திலுள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நினை வஞ்சலி நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட குழு உறுப்பினர் கே.ஆர்.திருத்தணி காசலம், தாலுகா செயலாளர் விஜய குமார், சிஐடியு மாவட்ட பொருளாளர் கே.மாரப்பன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் ரங்க சாமி மற்றும் பி.வாசுதேவன், டி.பாப் பாத்தி உள்ளிட்ட பலர் பங்கேற்று, பி.சீனிவாசராவ் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் காரணாம்பாளையம் பகுதி யில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட செயலாளர் சண்முகவள்ளி, செல்வி, நஞ்சை கொளாநல்லி, சத்திரம் பகுதி யில் மைதிலி, சுரேஷ், பெரியூர் பகுதி யில் கணேசன், ஞானசேகரன், ஊஞ் சலூரில் அமிர்தலிங்கம், சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் சார்பில் பவானிசாகர் ஒன்றியத் தில் நடைபெற்ற நிகழ்வில் தலைவர் ரங்கசாமி, செயலாளர் ஜெகநாதன், மணி உட்பட பலர் கலந்து கொண்ட னர்.
பவானியில் நடைபெற்ற நிகழ்வில் தாலுகா கமிட்டி தலைவர் பி.பன்னீர்செல்வம், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தாலுகா செயலாளர் எஸ்.மாணிக்கம், சிஐடியு நிர்வாகிகள் ஏ.ஜெகநாதன், ஜி.தியாக ராஜன், பி.மாதையன், மாதர் சங்கத் தின் டி.மாதேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோட்டில் நடைபெற்ற நினைவஞ் சலி நிகழ்ச்சியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் கணேஷ்பாண்டியன், மாவட்ட செய லாளர் தங்கமணி, மாவட்ட இணைச் செயலாளர் துரைசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் ஆறுமுகம் மற்றும் ஆண்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிநாராயணன், திருச் செங்கோடு பார் அசோசியேசன் தலை வர் வழக்கறிஞர் சேகரன் மற்றும் சூரி யம்பாளையம் சீனிவாசன், திருச் செங்கோடு ஒன்றிய செயலாளர் வேலாயுதம் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் மாவட்டம், மேட்டூர் சின்ன பார்க் அருகில் சிஐடியு சங்க அலுவ லகத்தில் நடைபெற்ற நிகழ்வில் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் செ.கருப்பண்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செய லாளர் வி. இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.