tamilnadu

ஈரோடு மற்றும் கோவை செய்திகள்

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி

ஈரோடு, ஜூலை 11- கூட்டுறவு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறு வதற்கு, கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இதன்படி இந்தாண்டு, ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், முழு நேர கூட்டு றவு மேலாண்மை பட்டய பயிற்சி ஜூலை 15ல் துவங்கப் பட இருந்தது. இந்நிலையில் இப்பயிற்சி ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கும் என கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சியில், கூட்டுறவு பட்டய பயிற்சியுடன், கணினி பயிற்சி, நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப் படுகிறது. கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு தனியே பட்டய சான்றிதழும், கணினி பயிற்சிக்கு தனியே சான்றிதழும், நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு தனியே சான்றிதழும் என மூன்று சான்றிதழ் ஒரே பயிற்சியில் வழங்கப்படும்.  பயிற்சியில் சேர விரும்புவோர், ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையம், வாய்க்கால்மேடு, கொங்கம்பா ளையம், சித்தோடு (தொலைபேசி: 0424 2535632) என்ற முகவரியில் நேரில் அணுகி விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய் செலுத்தி விண்ணப்பத்தை பெறலாம். பயிற்சி கட்ட ணம் ரூ.14,850 என ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்க ளின் இணை பதிவாளர் எஸ்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

முறையற்று இயங்கும் ‘‘ரெட் டேக்சி’’ வாடகை கார் ஓட்டுநர்கள் புகார்

கோவை, ஜூலை 11- முறையற்ற வகையில் இயங்கும் ரெட் டேக்சி மற்றும் ஓலா நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வாடகை கார் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர் சங் கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  இதில், ரெட் டேக்சி மற்றும் ஓலா நிறுவனங்கள் வெகு தூர பயணங்களுக்கு ஒரு வழி பயண வாடகை மட்டுமே வசூல் செய்வது, அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு பாது காப்பு உதவிகள் வழங்காமலும், பயணிகள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் ஓட்டுனர்களை பணி நீக்கம் செய்வது, கார்களில் அதிக அளவில் பயணிகளை ஏற்றி செல்வது, ரத்து செய்யும் வாடகைக்கு பணம் பிடிப்பது என பல்வேறு முறைகேடான வகையில் கார்களை இயக்கு வதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, இந்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மனுவில் கூறியுள்ளனர்.