ஈரோடு, டிச. 8- வன்முறையற்ற, போதையற்ற தமி ழகத்தை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மேற்கொண்ட 400 கிமீ நடை பயணத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு ஈரோட்டில் பாராட்டு விழா நடைபெற்றது. வன்முறையற்ற தமிழகம், போதை யற்ற தமிழகம் என்ற முழக்கத்தோடு கோட்டையை நோக்கி அனைந் திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தினர் 400 கி.மீ நடைபயணம் மேற் கொண்டனர். இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலு வலகத்தில் நடைபெற்ற பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங் கவேல் கலந்து கொண்டு ஈரோடு மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்ட மாதர் சங்கத்தினருக்கு பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார். இதில், மாவட்ட செயலாளர் ஆர்.ரகு ராமன், செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.