ஈரோடு, அக்.31- ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே வியாழனன்று சாலை விபத்தில் 7 வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள தளுவம்பாளைத் தில் வசித்து வருபவர் பிரசாந் (27). இவரது மனைவி முத்தழகி (22), மகன் சரவணன் (9), மகள் நிதர்ஷனா (7). இந்நிலையில், வியாழனன்று சிறுமி நிதர்ஷனா மளிகை கடைக்கு சென்று வீடு திரும்பும் போது டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்தி லேயே உடல் நசுங்கி பலியானார். இது குறித்து தகவலறிந்து வந்த கொடுமுடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலை கை பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.