ஈரோடு, மே 28 - பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் தெலுங் கானா மாநிலத்தில் இருந்து 2 ஆயிரத்து 600 டன் அரிசி ஈரோட்டுக்கு ரயிலில் கொண்டு வரப் பட்டது. பொது விநியோக திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில் இருந்து உணவுப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு ஈரோட்டில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்படும். பின்னர் அப்பொருட்கள் மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்படும். இந்நிலை யில், பொது விநியோகத் திட்டத்தின் சார்பில், ஈரோடு மாவட்டத்துக்கு தேவையான புழுங்கல் அரிசியை தெலுங்கானா மாநிலத்தில் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து, அங்கு முதல் கட்டமாக 2 ஆயிரத்து 600 டன் புழுங்கல் அரிசி கொள்முதல் செய்யப்பட்டு ரயில் மூலம் ஈரோட்டிற்கு கொண்டு வரப்பட்டது. புதனன்று ரயில் மூலம் 42 பெட்டி களில் கொண்டு வரப்பட்ட 2 ஆயிரத்து 600 டன் அரிசி, ஈரோடு மூலப்பாளையம் மற்றும் பவானி ரோட்டில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும் இந்த சேமிப்பு கிடங்குகளில் இருந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு புழுங்கல் அரிசி எடுத்துச்செல்லப்பட்டு, பொதுமக்களுக்கு விநி யோகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரி வித்தனர்.