tamilnadu

img

கராச்சியில் இருக்கிறார் தாவூத்?

இஸ்லாமாபாத்:
1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பில் தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 88 தீவிரவாதிகள், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதிப்பரிமாற்ற தடை விதித்து பாகிஸ்தான் விடுத்த அறிவிப்பில் தாவூத் இப்ராஹிம் பெயரும் இடம் பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.ஆனால், பாகிஸ்தான் அரசு சார்பில் எந்தவிதமான அதிகாரபூர்வமான அறிவிப்பும் இல்லை. கடந்த 27 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த தாவுத் இப்ராஹிம் கராச்சியில்தான் இருக்கிறார் என இந்திய அரசு தொடர்ந்து ஆதாரங்களுடன் கூறி வந்தது, அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியது.

;