tamilnadu

இலங்கை தற்கொலைத் தாக்குதலில் பெண்

கொழும்பு,ஏப்.24-இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நிகழ்த்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தற்கொலைப் படையாக செயல்பட்டவர்களில் ஒருவர் பெண் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ருவான் விஜேவர்தனே தெரி வித்துள்ளார்.மேலும் அவர் கூறுகை யில், இலங்கை குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்களில் ஒருவர் இங்கிலாந்தில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, ஆஸ்திரேலியா சென்று அங்கு முதுகலை பட்டம் பெற்று, இலங்கையில் வாழ்ந்து வந்துள்ளார்.மொத்தம் 7 தற்கொலைப் படை வீரர்கள் இந்த தொடர் குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளனர். தொடர் குண்டு வெடிப்புக்குத் தலைமை தாங்கி நடத்தியவனும் தற்கொலைப் படைத் தாக்குதலில் உயிரிழந்துள்ளான் என்று ருவான் கூறியுள்ளார்.

;