tamilnadu

ரயிலில் இருந்து தவறி கடலில் விழுந்து மூதாட்டி சாவு

இராமேசுவரம், ஏப். 20- அருப்புக்கோட்டையை சேர்ந்த ஜக்குபாய்(65). இவரது கணவர் இறந்த நிலையில் தனது இரண்டு மகன்கள் வீரய்யா,முருகன் பரமரிப்பில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இராமேசுவத்தில் இருந்து திருச்சி செல்லும் ரயிலில் ஜக்குபாய் சென்றுள்ளார். பாம்பன் பாலத்தில் 70- வது தூண் அருகே வரும் போது ரயிலில் இருந்து தவறி கடலில் விழுந்துள்ளார். அந்த பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த பேரிடர் மேலாண்மை குழு நண்பர்கள் விரைந்து சென்று அவரை மீட்டனர். ஆனால் அதற்குள் மூதாட்டி உயிரிழந்துவிட்டார். இது குறித்து ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர் மூதாட்டியின் உடலை ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கடலில் விழுந்து உயிரிழந்ததால் மண்டபம் கடலோர காவல்துறையினர் வெள்ளிக்கிழமை வழக்கு பதிவு செய்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்

;