tamilnadu

கர்நாடக மாநில மாணவர் கடலில் குளித்தபோது மாயம்

 இராமேஸ்வரம்,டிச.29-  கர்நாடாக மாநிலம் சித்தரதுர்க்கா மாவட்டம் நிஜலிங்கப்பா மேல் நிலைப் பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்கள்  100 பேர் சில நாட்களுக்கு முன் இரண்டு பேருந்துக்களில் சுற்றுலாவாக தமிழகம் வந் துள்ளனர். ஞாயிறு அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனை பகு திக்குச் சென்ற மாணவர்கள் கடலில் இறங்கிக் குளித்துள்ளனர். அப்போது பிரிஜ்வாலா என்ற மாணவர் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். அவரை அப்பகுதி மீனவர்களும், கடலோர காவல் பாது காப்பு காவல்துறையினரும் தேடி வருகின்றனர்.

;