பரமக்குடி, மே 24- பரமக்குடி நகராட்சியில் பணிபுரியும் டெங்கு தடுப்பு பணியாளர்கள் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் தங்களை சிஐடி சங்கத்தில் இணைத்துக்கொண்டனர். இதைத்தொடர்ந்து அமைப்புக்குழுக் கூட்டம் பரமக்குடியில் சந்திரா தலைமை யில் நடைபெற்றது. சிஐடியு இராமநாத புரம் மாவட்டத் துணைச் செயலாளர் தி.ராஜா, மின் ஊழியர் மத்திய அமைப் பின் மாவட்டத் துணைச் செயலாளர் முரு கேசன், வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். இந்தக் கூட்டத்தில் கௌரவத்தலைவராக தி.இராஜா, தலை வராக சித்ரா, செயலாளராக சந்திரா, பொருளாளராக கவிதா, துணைத்தலை வர்களாக பானுமதி, சர்மிளா, சாந்தி, துணைச்செயலாளர்களாக கண்ணன், மரியாள், செல்வநாச்சியார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஜேம்ஸ் நன்றி கூறினார்.