tamilnadu

img

தமிழக மீனவர்கள் 11 பேர் கைது

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்களை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையின் காங்கேசன்துறை முகாமுக்கு விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 8 தமிழக மீனவர்கள் நேற்று முன்தினம் நாடு திரும்பினர்.

இந்நிலையில் ரமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

;