நாட்டு விடுதலைப் போராட்டங்களிலும், தொழிலாளர் உரிமைக்கான போராட்டங்களிலும் தமிழ்நாட்டு உழைப்பாளி மக்களின் பங்களிப்பு மகத்தானது. இந்தியாவில் மே தினத்தை முதன் முதலின் கொண்டாடிய பெருமையும், சட்டப்படி பதிவு செய்யப்பட்ட முதல் சங்கம் என்ற பெருமைக்குரிய மெட்ராஸ் லேபர் யூனியன் செயல்பட்டதும் தமிழகத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பொய் வழக்குகளும், சதி வழக்குகளும் தொழிற்சங்கத்தில் தலைமை தாங்கிய தலைவர்கள் மீது பாய்ந்தன. தூக்கு தண்டனை, துப்பாக்கிச்சூட்டில் இன்னுயிரையிழந்த மகத்தான தியாகிகள் நிறைந்த மண்ணின் வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது. உண்மையான வரலாற்றை திரித்தும், மறைத்தும் இன்றைய இளம் சமூகத்தினரிடையே திணிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதை தடுத்தாகவேண்டியது இன்றைய அவசர பணியாக உள்ளது.
தமிழகம் முழுவதும் குறிப்பிடத்தக்க தொழில் ரீதியான போராட்டங்கள், சம்பவங்கள் குறித்தான புகைப்படங்கள், ஆவணங்கள் சேகரித்து ஆவணப்படமாக்கும் பணியை சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு மேற்கொண்டுள்ளது. மாவட்டங்களில், சங்கங்களில், தனிநபர்களிடம் உள்ள போராட்ட புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் இருப்பின் அதன் நகல்களை சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழுவிற்கு அளித்து உதவிட வேண்டுகிறோம்.
தொடர்புக்கு
கே.திருச்செல்வன்
உதவி பொதுச்செயலாளர்
9444577036
கே.ஆறுமுகநயினார்
செயலாளர்
8903143682
முகவரி
சிஐடியு, தமிழ்நாடு மாநிலக்குழு,
தோழர்.ஏ.நல்லசிவன் நினைவகம்,
27, மசூதி தெரு, சேப்பாக்கம், சென்னை-600 005.
E-Mail : tntuhistory@gmail.com