tamilnadu

img

ஆம்னி பேருந்து கட்டண கொள்ளையை தடுக்காதது ஏன்? கே.எஸ். அழகிரி பேட்டி

சென்னை,அக்.23- ஆம்னி பேருந்துகளின் பகிரங்க கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துகிற வகையில் கடு மையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமி ழக அரசை கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்  பட்டிருக்கிறது. இந்தச் சூழலை பயன்படுத்திக்  கொண்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்ட ணத்தை 100 சதவீதம் உயர்த்தியிருக்கிறார்கள்.  ஒளிவு மறைவு இல்லாமல் பகிரங்கமாக இணைய தளத்தில் முன்பதிவு செய்து வசூலிக்கப்படுகிறது. இத்தகைய கட்டணக் கொள்ளை குறித்து தமி ழக அரசின் போக்குவரத்துத் துறை கண்டும் காணா மலும் இருப்பது ஏன்? இந்த கொள்ளை லாபத்தை  தடுத்து நிறுத்த வேண்டிய அதிமுக ஆட்சியாளர்கள்  எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதன் பின்னணி என்ன? 

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் எந்தவித கட்டுப்  பாடோ, ஒழுங்குமுறையோ இல்லாமல் தன்னிச்சை யாக தங்களது விருப்பம் போல் பேருந்துகளை இயக்கி வருகிறார்கள். இதற்கு காரணம்  ஆட்சி யாளர்களின் ஒத்துழைப்பு தான். இத்தகைய ஒத்து ழைப்பிற்காக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒரு பெரும் தொகையை நன்கொடையாக ஆளுங்  கட்சிக்கு வழங்குவதாகக் கூறப்படுகிறது.  தனியார் ஆம்னி பேருந்துகளை பயன்படுத்தும்  பொதுமக்களின் நலனில் தமிழக ஆட்சியாளர்க ளுக்கு அக்கறை இருக்கும் என்றால் உடனடியாக கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துகிற வகை யில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.