tamilnadu

img

சங்கராபரணி ஆற்றில் தடுப்பணை கட்டப்படுமா?

விழுப்புரம், ஆக. 3- விழுப்புரம் மாவட்டம் முழுமை யான விவசாய மாவட்டமாகும். ஆனால் பெரும்பாலும் வான் மழை யையே நம்பி  விவசாயம் செய்யப்படு கிறது. இந்த மாவட்டத்தில் வற்றாத ஜீவ நதி என்று சொல்லுமளவிற்கு எந்த நதியும் இல்லை. பருவமழைக் காலங்களில் பொழியும் மழை நீரை தேக்கி வைக்க போதிய வசதி  இல்லாததால், இங்குள்ள நதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு அனைத்து  நீரும் கடலில் போய் கலந்து விடும். மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த இங்குள்ள சிறு  சிறு நதிகளின் குறுக்கே ஆங்காங்கே  தடுப்பணைகள் கட்டி மழைநீரை சேமிக்க வேண்டும் என விவசாயி கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி மற்றும் மேல்மலையனூர் வட்டங்கள் மலையும் மலை சார்ந்த  குறிஞ்சி நிலம் என்று சொல்லும் அள விற்கு ஆங்காங்கே மலை குன்றுகள்  அதனை ஒட்டிய நிலங்களில் சிறுசிறு பாறைகளும் காணப்படும். இப்பகுதியில் உள்ள விவசாயிகள் ஆற்றுப்பாசனமும், வாய்க்கால் பாசனமும் இல்லாத நிலையில் ஏரி  மற்றும் கிணற்று பாசனத்தை நம்பியே விவசாயம் செய்கின்றனர். விவசாயம் தடையின்றி செய்வதற்கு  ஏற்ப ஏரி, குளங்கள், வாய்க்கால்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் தற்போது பெரும்பாலான ஏரி, குளங்கள் அழிந்து விட்டன. தற்போது  செஞ்சி, மேல்மலையனூர் தாலுகா வில் 338 ஏரிகள் உள்ளன. வல்லம் ஒன்றியத்தில் உள்ள 93 ஏரிகள் மூலம்  12 ஆயிரத்து 92 ஏக்கர் நிலமும், செஞ்சி ஒன்றியத்தில் 131 ஏரிகள் மூலம் 11 ஆயிரத்து 566 ஏக்கர் நில மும், மேல்மலையனு?ர் ஒன்றியத்தில்  114 ஏரிகள் மூலம் 10 ஆயிரத்து 471  ஏக்கர் நிலமும் பாசனம் பெறுகின்றன.  இந்த ஏரிகளுக்கு மழை நீர் வருவ தற்கும், ஏரி நிரம்பும் போது உபரி நீர் வீணாகாமல் அடுத்துள்ள ஏரிக்கு தண்ணீர் செல்லவும் திட்டமிட்டு வாய்க்கால்கள் அமைக்கப்பட்டன. பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரும் வீணாகாமல் உபரி நீர்  ஓடைகள் வழியாக ஆற்றில் கலக்கும்  படி ஆங்கிலேயர்கள் வடிவமைத்து, ஆக்ரிமிப்பில் இருந்தும் பாதுகாத்த னர், அதன் பின்னர் ஏரி வாய்க்கால்க ளும்,  ஏரிகளும் ஆக்கிராமிப்பினால் அழிந்து ஏரி பாசனம் குறைந்து வருகின்றன.

இந்த பகுதி ஏரிகளுக்கு முக்கிய  நீர் ஆதாரமாக பாக்கம் மலைக்காடு கள் உள்ளன. இங்கு உருவாகும் வராக நதியும், மேல்மலையனு?ர் ஏரி யின் உபரி நீர் வெளியாகும் இடத்தில் உருவாகும் சங்கராபரணி  ஆறும் முக்கியமான நீர் ஆதா ரங்கள். ஏரிகளுக்கு தண்ணீரை திருப்புவதற்காக வராக நதி மற்றும்  சங்கராபரணி ஆற்றில் 6 இடங்களில் தடுப்பணைகளை கட்டியுள்ளனர். இதில் கூடப்பட்டு, செவலபுரை அணைகள் முக்கியமானவை. கூடப்பட்டு அணையில் இருந்து சிங்கவரம், மேலச்சேரி, சிறுகடம்பூர், குப்பத்து ஏரி, நாட்டேரி ஏரிக்கு தண்ணீர் செல்லும் படி 13 கி.மீ., வாய்க்கால் அமைத்துள்ளனர். இதன்மூலம் 510 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றது. செவலபுரை அணைக்கட்டில் இருந்து வல்லம் ஒன்றியத்தில் உள்ள மேல்களவாய், நெகனூர், பெரும்புகை உள்ளிட்ட 15 ஏரிகளுக்கு தண்ணீர் செல்வ தற்கு 16 கி.மீ., வாய்க்கால் அமைத் துள்ளனர். இந்த 15 ஏரிகள் மூலம் 1,440 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மழை காலத்தில் வெள்ளம் திரண்டு ஓடும் சங்கராபரணி ஆறு அடுத்த சில மாதத்தில் வறண்டு போகும். அதிக மழை பொழிந்தும் அடுத்த சில மாதங்களிலேயே ஆற்றை ஒட்டிய பகுதியில் உள்ள கிணறுகளும் தண்ணீர் இன்றி வற்றிபோகும். எனவே செஞ்சி பகுதியின் நீர் வளத்தை பாதுகாக்க சங்கராபரணி ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என பொது மக்களும் விவ சாயிகளும் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் தொடர் கோரிக்கை காரணமாக பொதுப்பணித்துறை நீர்பாசனப் பிரிவினர் கடந்த ஆண்டு சங்கராபரணி ஆற்றில் தடுப்பணை கட்ட வாய்ப்புள்ள இடங்களை தேர்வு  செய்து ஆய்வு நடத்தினர். ஆய்வு  நடத்தி பல மாதங்கள் ஆகியும் இது வரை தடுப்பணைக் கட்டுவதற்கான பணிகள் துவக்கப்படவில்லை. இன்னும் சில மாதங்களில் வட கிழக்கு பருவமழை தொடங்கும் முன்  இப்பகுதி நீர் வளத்தை மேம்படுத்த தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.