ராய்பூர், ஏப்.13- உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் மரணமடைந்த தனது தாயின் முகத்தைப் பார்க்க, இறுதி சடங்குகள் செய்ய 1,100 கி.மீ., பயணம் செய்து சொந்த ஊர் அடைந்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தாய் இறந்ததால், ஆயுதப்படை வீரர் ஒருவர், 1,100 கி.மீ., பயணம் செய்து சொந்த ஊர் அடைந்துள்ளார்.
உத்தரப்பிரசே மாநிலம் மிர்சாபூர் மாவட்டம் சிகார் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் யாதவ், (30) சத்தீஸ்கரில் நக்சலைட்கள் அதிகமுள்ள பீஜப்பூர் மாவட்டத்தில், ஆயுதப்படை வீரராக பணியாற்றி வருகிறார். இவரது தாயார் இறந்த செய்தி கிடைத்தவுடன் தனது உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு ஏப்.7-ஆம் தேதி பீஜப்பூரிலிருந்து புறப்பட்டுள்ளார். சந்தோஷ் யாதவ் பீஜப்பூரிலிருந்து நெல் ஏற்றி வந்த லாரியில் லிப்ட் கேட்டு ஜகதல்பூரை அடைந்தார். அங்கு இரண்டுமணிநேரம் காத்திருந்து அவ்வழியே வந்த ஒரு வாகனத்தில் லிப்ட் கேட்டு காண்டேகானை அடைந்தார்.
காண்டேகானில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட அவர், காவலர்களுக்கு தனது நிலைமையை விளக்கியுள்ளார். இதையடுத்து ராய்ப்பூருக்கு மருந்துகளை ஏற்றிச் சென்ற ரயிலில் செல்ல அவர்கள் உதவியுள்ளனர். சுமார் எட்டு சரக்கு ரயில்களில் மாறி மாறி பயணம் செய்து தனது கிராமமான சுனாரை அடைந்து தனது தாயாரின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார், கிட்டத்தட்ட மூன்று நாட்கள் 1,100 கி.மீ பயணம் செய்து தமது கிராமத்தை அடைந்துள்ளார். சந்தோஷ் யாதவின் மனைவி இரு குழந்தைகள் சுனார் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.