tamilnadu

img

தொழிலாளர் விரோதப்போக்கைக் கண்டித்து வெகுண்டெழுந்த தொழிற்சங்கங்கள்

தொழிலாளர் சட்டங்களை நீக்குவது, 12 மணி நேரமாக வேலை நேரத்தை அதிகரிப்பது, கனிம வளங்களையும், பொதுத்துறைகளையும் தனியாருக்கு கொடுப்பது போன்றவற்றை கண்டித்தும், மின்சார திருத்த மசோதா, வேலைநீக்கம், சம்பள வெட்டு, வேலை நேரம் அதிகரிப்பு ஆகியவற்றை கைவிட கோரியும், ஊரடங்கு காலத்தில் நிரந்தர, கேஷூவல், காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் அனைவருக்கும் முழுச் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வெள்ளியன்று (ஜூலை 3) தேசிய எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி தமிழகத்தில் 16 தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக வடமாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.