தேனி, மார்ச் 31- தேனி மாவட்டத்திலிருந்து தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 21 பேரை கண்டுபிடிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டத்தில் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய 503 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தில்லியில் கடந்த மார்ச் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மாநாட்டில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 34 பேர் பங்கேற்றது தெரிய வந்துள்ளது. மாநாட்டிற்குச் சென்றிருந்தவர்களில் 13 பேர் அங்கேயே தங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 21 பேர் தில்லியிலிருந்து தேனி மாவட்டத்திற்கு திரும்பியுள்ளனர். இவர்களைக் கண்டறிந்து வீடுகளில் தனிமைப்படுத்தி, மருத்துவக் கண்காணிப்பில் வைக்கும் பணியில் காவல் துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.