tamilnadu

img

பொருளாதார நெருக்கடியால் நாடு கடும் பின்னடைவை சந்திக்க உள்ளது - அ.சவுந்தரராசன் பேட்டி

புதுக்கோட்டை, டிச.6- தற்பொழுது நிலவும் பொருளாதார நெருக்கடியால் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்க உள்ளது என்றார் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன்,  புதுக்கோட்டையில் வெள்ளிக் கிழமையன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு: கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் கடுமையான பொரு ளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வளர்ச்சி விகிதம் 4.5 சதவிகிதமாக சரிந்துள் ளது. பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணிய சாமி போன்றவர்கள் 1.5 சதவிகித மாக குறைந்துள்ளதாகத் தெரிவித்துள் ளனர். மின்நுகர்வு 14.5 சதவிகிதமாக சரிந்துள்ளது. அப்படியென்றால் லட்சக்கணக்கான சிறு தொழில்கள் மூடப்பட்டுள்ளன என்று அர்த்தம். புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப் படாத நிலையில் 90 லட்சம் பேர் இருக்கின்ற வேலையையும் இழந்துள் ளனர்.

சிறு தொழில்கள் தான் நாட்டில் 90 சதவீத வேலை வாய்ப்புகளைத் தரு கின்றன. அதை நசுக்கி விட்டு, கார்ப் பரேட் நிறுவனங்களுக்கு 2.75 லட்சம் கோடி வரிச் சலுகையை வாரி வழங்கு கின்றனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் கொத்துக் கொத்தாக வேலை இழப்புகள் நடைபெறு கின்றன. கட்டுமானத் தொழில் உள்ளிட்ட முறைசாராத் தொழில்களும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. அந்தந்த இடங்களில் கிடைக்கும் மூலப் பொருட்களைப் பயன்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டுமென தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறோம். உதாரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பூ சாகுபடி கணிசமான அளவில் நடை பெறுகிறது. இதனைக் கொண்டு  வாசனைத் திரவியத் தொழிற்சாலை களை நிறுவி வேலைவாய்ப்பை உருவாக்கலாம். விவசாயிகளையும் பாதுகாக்கலாம். 

காவிரி, குண்டாறு திட்டத்தை நிறை வேற்றினால் அந்தப் பணியில் ஏராள மான தொழிலாளர்களை ஈடுபடுத்த லாம். புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு மிகப்பெரிய அளவில் விவசாயப் பயன்கள் கிடைக் கும். ஆட்சியாளர்கள் இப்படித் தான் திட்டங்களை தீட்ட வேண்டும். போக்குவரத்துத் தொழி லாளர்களின் ஊதிய ஒப்பந்தத்தில் அரசு ஏற்றுக் கொள்ளப்பட்ட சரத்துக் களை அமல்படுத்தக் கோரி தொழிற் சங்கங்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளன. சென்னை தொழிலாளர் இணை ஆணையர்(சமரசம்) பேச்சுவார்த்தை உருப்படியாக நடக்கவில்லை. வருகின்ற 18-ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் கோரிக்கை நிறை வேற்றப்படாவிட்டால் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழி யில்லை.

சென்னை மாநகரத்தில் சிற்றுந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இரண்டு, மூன்று கிலோ மீட்டர் தொலைவுக் கெல்லாம் பேருந்துகள் செல்லாத பகுதிகள் சென்னையில் நிறைய உள்ளன. எனவே, மீண்டும் நிறுத்தப் பட்ட சிற்றுந்துகளை இயக்க வேண்டும். உயர் தொழில்நுட்பம் மூலம் சொகுசுப் பேருந்துகளை இயக்கப் போவதாகக் கூறுகின்றனர். ஒரு சொகுசுப் பேருந்து க்கு ஒரு கோடி செலவு ஆகும். இந்தத் தொகையில் 4 பேருந்துகளை வாங்கி விடலாம். மத்திய, மாநில அரசுகள் பி-4-ல் இருந்து பி-5-ஐ தவிர்த்து பி-6-க்கு தாவுகின்றனர். இது வாகன உற்பத்தியில் தேவையற்ற குழப் பத்தை ஏற்படுத்தும். இந்தியா போன்ற  வளரும் நாடுகள் இதில் தாக்குப் பிடிப்பது சிரமம்.

30 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் அல்லது 50 வயது நிரம்பியவர்கள் விருப்ப ஓய்வு பெற வேண்டுமென அரசு ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. ஏற்கனவே 3 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இவர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு அந்த இடங்களில் தினக் கூலி களை அமர்த்துவதற்கு முயற்சிக்கின் றனர். இதை சிஐடியு ஒரு போதும்  அனுமதிக்காது. இதை நடைமுறைப்  படுத்த முயன்றால் அரசு ஊழியர் களோடு இணைந்து மிகப்பெரிய அள விலான போராட்டத்தை நடத்துவோம்.  சிஐடியு அகில இந்திய மாநாடு வருகின்ற ஜனவரி 25, 26 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. இந்த  மாநாட்டில் மேற்கண்ட கோரிக்கை களுக்கு எல்லாவற்றையும் தீர்ப்பதற் கான வழிமுறைகளைக் கண்டறிவோம். இவ்வாறு அ.சவுந்தரராசன் குறிப்பிட்டார்.  பேட்டியின் போது சிஐடியு மாநிலச் செயலாளர் எம்.ஐடாஹெலன், மாவட்டத் தலைவர் கே.முகமதலி ஜின்னா, செயலாளர் ஏ.ஸ்ரீதர், பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;