tamilnadu

img

திரைத்துறை ஊழியர்களின் நலனை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திடுக!

தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை,பிப்.20-  திரைத்துறை ஊழியர்களின் நலனை பாது காக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: சென்னைக்கு அருகில் உள்ள நசரத்பேட்டை யில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்தியன் -2, சினிமா தயாரிப்பு நடவடிக்கையின் போது மூன்று ஊழியர்கள் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். சிலர் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தோர் குடும்பத்தின ருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பாக இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.   அதேபோல காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்க ளுக்கு தரமான சிகிச்சையும், நிவாரணமும் தமிழக அரசு வழங்க வேண்டும். 

பல படபிடிப்புத் தளங்களில் இதுபோன்ற நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகள், மருத்துவ சிகிச்சை, நிவாரணம் வழங்குவது ஆகியவற்றில் போதிய அக்கறை காட்டப்படாத நிலை நீடித்து வருகிறது. சினிமா படப் பிடிப்பு உரிய காலத்தில் நடைபெற வேண்டும் என்ற நோக்கோடு அவசர அவசரமாக உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு உபகரணங்கள் போன் றவை வழங்கப்படாமல் பணிபுரிய நிர்ப்பந்திக்கப் படுவதாக பரவலாக தகவல்கள் வருகின்றன. இதே போன்று படப்பிடிப்பு ஊழியர்களுக்கு சொற்ப  சம்பளமும், அந்த சம்பளமும் கூட உரிய காலத்தில் வழங்கப்படாத நிலையும் இருக்கிறது. பல நூற்றுக் கணக்கான கோடி ரூபாய் முதலீடும், நட்சத்திர நடி கர்களுக்கு நூற்றுக்கணக்கான கோடிகளில் சம்பள மும் வழங்கும் திரைப்பட தயாரிப்புகளில் கூட சாதாரண ஊழியர்களுக்கு உரிய சம்பளமும், குறித்த காலத்தில் சம்பளத்தை வழங்காத நிலை யும் நீடிக்கிறது. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு தமிழக அரசு திரைத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு, சம்பளம், விபத்து தடுப்பு, நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட பிரச்சனைகளில் உரிய தீர்வு காண ஒரு உயர்மட்டக்குழுவை அமைத்து இத்தகைய பிரச்ச னைகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;